ஜெயங்கொண்டம் பகுதியில் அரசால் தடை செய்த புகையிலை பொருள் விற்றவர் கைது

 

ஜெயங்கொண்டம், அக்.17: ஜெயங்கொண்டம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து எஸ்ஐ நாகராஜன் மற்றும் போலீசார் ஜெயங்கொண்டம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர், அப்போது ஜூப்ளி ரோடு பகுதியில் வீட்டு வாசலில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகள் வைத்திருந்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த சத்தார் மகன் இப்ராஹிம் (44) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

The post ஜெயங்கொண்டம் பகுதியில் அரசால் தடை செய்த புகையிலை பொருள் விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: