கொமதேக ஆலோசனை கூட்டம்

இடைப்பாடி, அக்.17: இடைப்பாடி ஒன்றிய கொமதேக செயல்வீரர்கள் கூட்டம் பூலாம்பட்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ராஜூ தலைமை வகித்தார். செயலாளர் சிவசக்தி வரவேற்று பேசினார். சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் பேரூர் அவைத்தலைவராக காசிவிஸ்வநாதன் தேர்வு செய்யப்பட்டார். பேரூர் செயலாளராக சதீஷ் ராஜ், பொருளாளர் முருகேசன், இளைஞரணி அமைப்பாளர் சங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட துணைச் செயலாளர் மாது. இணை செயலாளர் சுரேஷ், இலக்கிய அணி செயலாளர் பாலகிருஷ்ணன், இளைஞரணி செயலாளர் நல்லகுமார், புறநகர் ஒன்றிய செயலாளர் தினேஷ் மற்றும் ஒன்றிய துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கார்த்திக் மற்றும் நாகராஜ், ஒன்றிய அமைப்பாளர் கந்தசாமி, தேவூர் இளைஞரணி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post கொமதேக ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: