கிழக்கு கடற்கரை சாலையில் ஹெச்.சி. எல் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சைக்ளோத்தான் போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (15/10/2023) செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை, உத்தண்டி அருகே கானாத்தூர் ரெட்டிக்குப்பத்தில் ( மாயாஜால்முன்புறம்) நடைபெற்ற, ஹெச்.சி. எல் நிறுவனம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய சைக்கிள் ஓட்டுதல் சம்மேளனம் இணைந்து நடத்திய மாபெரும் சைக்ளோத்தான் போட்டியினை (HCL, SDAT & CFI) கொடியசைத்து தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்

தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மற்றும் இந்திய சைக்கிள் ஓட்டுதல் சம்மேளனத்தின் ஒத்துழைப்புடன் மாபெரும் சைக்ளோத்தன் போட்டி செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை, உத்தண்டி அருகே கானாத்தூர் ரெட்டிக்குப்பத்தில் (மாயாஜால் முன்புறம்) இன்று (15/10/2023) நடைபெற்றது.

இந்த போட்டி 55கிமீ, 23கிமீ மற்றும் 15கிமீ ஆகிய மூன்று பிரிவுகளில் நடைபெற்றது. இதில் 1100க்கும் (956 ஆண்கள் மற்றும் 169 பெண்கள்) மேற்பட்ட சைக்ளிங் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி, தொழில்முறை மற்றும் அமெச்சூர் ஆகிய இரு பிரிவுகளிலும் பங்கேற்பாளர்களை கொண்டது. இந்த போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு, தொழில் வல்லுநர்களுக்கு ரூபாய்.15 லட்சம் மற்றும் அமெச்சூர்களுக்கு ரூபாய். 15 லட்சம் என ரூபாய் 30 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (15/10/2023) ஹெச்.சி. எல் சைக்ளோத்தான் போட்டியினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்து வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் திரு ஜெ. மேகநாத ரெட்டி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல்நாத், தாம்பரம் காவல் துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி, தாம்பரம் இணை ஆணையர் மூர்த்தி, ஹெச்.சி. எல் நிறுவனத் தலைவர். . சுந்தர் மகாலிங்கம், ஆசிய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்புத் தலைவர் ஓன்கர் சிங், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடைபெற்ற முதல் எச்.சி.எல் சைக்ளோதான் போட்டியில் 1000க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சென்னையில் நடைபெற்ற போட்டி இரண்டாவது பதிப்பாகும்

The post கிழக்கு கடற்கரை சாலையில் ஹெச்.சி. எல் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சைக்ளோத்தான் போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி appeared first on Dinakaran.

Related Stories: