அப்போது தியான இல்ல பாதிரியார் மைக்கேல் என்கிற மகிழன்(62) மூலம் மைய உதவியாளர் ஜோஸ்வா (எ) இசக்கி அறிமுகமாகி உள்ளார். கேத்தரினுக்கு ஆறுதல் கூறி வந்த ஜோஸ்வா, அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்ததாகவும், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் எனக்கூறி கேத்தரினிடம் இருந்து ரூ.5 லட்சத்தையும் ஜோஸ்வா பெற்றுள்ளார். இந்நிலையில் கேத்தரினை ஜோஸ்வா திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து போதகர் மகிழனிடம் கூறியபோது அவரும் கேத்தரினிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தன்னை ஏமாற்றிய ஜோஸ்வா மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த போதகர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி கேத்தரின் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பேரில் இளம்பெண் கேத்தரினை ஏமாற்றி, அவரிடம் இருந்து பணத்தை பறித்ததாக, தியான மைய ஊழியர் ஜோஸ்வா மற்றும் பாதிரியார் மகிழன் மீது 294(பி), 420, 417, 506 (1) மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post தூத்துக்குடி அருகே தியானத்திற்கு வந்த சென்னை ஆசிரியையுடன் உல்லாசம் தியான மைய ஊழியர் மீது வழக்கு: தவறாக நடக்க முயன்றதாக பாதிரியார் மீதும் புகார் appeared first on Dinakaran.