ரூ.25 ஆயிரம் லஞ்சம்: பெண் துணை தாசில்தார் கைது

தக்கலை: குமரி மாவட்டம் கண்டன்விளை மடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி. இவருக்கு அதே பகுதியில் 7 சென்ட் விவசாய நிலம் உள்ளது. அந்த இடத்தில் வீடு கட்டுவதற்காக விவசாய நிலத்தை தரிசு நிலமாக மாற்றி தர கோரி கல்குளம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பத்தை பரிசீலித்த கல்குளம் துணை தாசில்தார் ருக்மணி, தரிசு நிலமாக மாற்ற ரூ. 25 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெகதீஸ்வரி, இது பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் செய்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று ஜெகதீஸ்வரியிடம், ரசாயன பவுடர் தடவிய 25 ஆயிரம் ரூபாய் நோட்டுகட்டுகளை கொடுத்து அனுப்பியுள்ளனர். இதனையடுத்து ஜெகதீஸ்வரி அந்த பணத்துடன் கல்குளம் தாலுகா அலுவலகத்திற்கு சென்று, துணை தாசில்தார் ருக்மணியிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் ருக்மணியை கைது செய்தனர்.

The post ரூ.25 ஆயிரம் லஞ்சம்: பெண் துணை தாசில்தார் கைது appeared first on Dinakaran.

Related Stories: