மதுபானம் விற்பனை செய்தவர் கைது

தேன்கனிக்கோட்டை, அக்.12: தேன்கனிக்கோட்டை போலீஸ் எஸ்ஐ.ஜெய்கணேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலிவாரம் கிராமத்தில் கங்காதரன் (42) என்பவர், தனது மளிகை கடையில் மதுபானம் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், கடையில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கடையில் மறைத்து வைத்து மது விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கங்காதரனை போலீசார் கைது செய்து, கடையில் இருந்த 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post மதுபானம் விற்பனை செய்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: