பன்னீர் ரோஜா விளைச்சல் அதிகரிப்பு

ராயக்கோட்டை, அக்.12: ராயக்கோட்டை பகுதியில் விவசாயிகள் பன்னீர் ரோஜா பூவை ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்துள்ளனர். பூ விளைச்சலுக்கான சீதோஷ்ண நிலை நிலவுவதாலும், நல்ல மழைப்பொழிவால் ஈரப்பதம் இருப்பதால், பன்னீர் ரோஜா பூக்கள் தரமானதாகவும், அளவில் பெரியதாகவும் விளைச்சலாகியுள்ளது. கடந்த மாதங்களில் கிலோ பூ ₹150வரை விற்பனையானது. ஆனால் பரட்டாசி மாதம் பிறந்த பின்பு, விழாக்கள், திருமண முகூர்த்தங்கள் இல்லாததால், பூக்களை வாங்க வியாபாரிகள் முன் வரவில்லை. இதனால் ஒரு கிலோ பூ ₹15க்கு கூட வாங்க ஆளில்லாததால் பறித்து வந்த பூக்களை, சாலையோரம் கொட்டிவிட்டு சென்றுள்ளனர். இதேபோல மற்ற பூக்களும் விலையில்லாமல் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

The post பன்னீர் ரோஜா விளைச்சல் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: