அரசு பஸ் டிரைவரிடம் புகையிலை பறிமுதல்

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெலாக்கோட்டை பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஊட்டியில் இருந்து கேரளா மாநிலம் கண்ணனூர் நோக்கி சென்ற அரசு பஸ்சை போலீசார் சோதனை செய்தனர். இதில், அரசு பஸ் டிரைவர் வைத்திருந்த பையில் 15 பாக்கெட் புகையிலை பெருட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து, அரசு பஸ் டிரைவர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நடத்துனர் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post அரசு பஸ் டிரைவரிடம் புகையிலை பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: