இவரது மகள் செல்வகுமாரி பட்டாம்பாக்கம் போர்டிங் பள்ளியில் +2 அங்கேயே தங்கி படித்து வருகின்றார். செல்வி கடந்த 5ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு நடுக்குப்பத்தில் உள்ள அக்கா சிவசக்தி வீட்டில் மகன்களுடன் தங்கிவிட்டார். கடந்த 9ம் தேதி காலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது இவரது வீட்டின் பின் பக்கமுள்ள கீற்றினை பிரித்து யாரோ வீட்டினுள் நுழைந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன் செயின், 2 கிராம் சுத்து மாட்டல் 1 ஜோடி, 2 ஜோடி கொலுசு ஆகிவைகளை திருடி சென்றது தெரிய வந்ததுஇதுகுறித்து பண்ருட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் தீவிரவிசாரணையில் அதே ஊரை சேர்ந்த முத்தாலு(35) என்பவர் நகைகளை திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தஅவரை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post பெண் முந்திரி தொழிலாளி வீட்டில் நகை திருடியவர் கைது appeared first on Dinakaran.
