மாவட்டத்துக்கு ஒரு தோழி விடுதி அமைக்க நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் பதில்

சென்னை: மாவட்டத்துக்கு ஒரு தோழி விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் தகவல் தெரிவித்துள்ளார். மதுராந்தகம் தொகுதியில் பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதி அமைக்கப்படுமா? என மரகதம் குமரவேல் கேள்வி எழுப்பினார். அடையாறு, விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், திருநெல்வேலி, சேலம், திருச்சியில் தோழி விடுதி செயல்பட்டு வருகிறது. தாம்பரம், திருவண்ணாமலை, ஒசூர், கிருஷ்ணகிரி, பரங்கிமலையில் தோழி விடுதி கட்டும் பணி நடைபெற்று வருகிறது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

The post மாவட்டத்துக்கு ஒரு தோழி விடுதி அமைக்க நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் பதில் appeared first on Dinakaran.

Related Stories: