கிராம உதவியாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு

 

மதுரை, அக். 9: வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியார் சங்க, மேலூர் வட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தலைவராக பழனிவேல்ராஜன், செயலாளராக சந்தானம், பொருளாளராக ஜான்சி ராணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் மாநில, மாவட்ட மற்றும் தாலுகா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் மணிகண்டன், உறுப்பினர்கள் மாரியப்பன், கரந்தமலை, சேகர் பிச்சை தரப்பில், புததாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

The post கிராம உதவியாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: