வீடு புகுந்து பணம் திருடிய சிறுவன் உள்பட இருவர் கைது

ஆட்டையாம்பட்டி, அக்.8: ஆட்டையாம்பட்டி அருகே வீரபாண்டி கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் பெரியசாமி(19). திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு டெக்கரேசன் செய்யும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த நண்பரான 9ம் வகுப்பு படிக்கும் 14வயது சிறுவனுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில், வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த யோகா மாஸ்டரான பழனிசாமி(63) என்பவர் நேற்று காலை குளிப்பதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றபோது, பெரியசாமி மற்றும் சிறுவன் ஆகியோர் அந்த பக்கமாக சுற்றியுள்ளனர். அவர்களை பழனிசாமி திட்டி அனுப்பியுள்ளார். இதையடுத்து, குளித்துவிட்டு வந்து பார்த்தபோது, வீட்டுக்கதவு திறந்து கிடந்தது.

பின் பக்க வாசலும் திறந்து கிடந்தது. பையில் வைத்திருந்த ₹10ஆயிரம் பணத்தை காணவில்லை. உடனே, சிறுவர்களை தேடியபோது, அரியானூர் பகுதியில் மரத்தடியில் அமர்ந்திருந்தது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்ததில், பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, இருவரையும் ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தார். போலீசார் விசாரித்து பெரியசாமி மற்றும் சிறுவனை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெரியசாமியை சேலம் மத்திய சிறையிலும், சிறுவனை கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்தனர்.

The post வீடு புகுந்து பணம் திருடிய சிறுவன் உள்பட இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: