காவிரியில் நீர் திறக்க மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் 11ம் தேதி முழு அடைப்பு போராட்டம்..!!

சென்னை: காவிரியில் நீர் திறக்க மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் 11-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் முழு அடைப்பு நடைபெறும் என திமுக விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் அறிவித்துள்ளார். கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரை பெற்றுத் தராத ஒன்றிய அரசை கண்டித்தும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. ஒன்றிய அரசின் அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

The post காவிரியில் நீர் திறக்க மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் 11ம் தேதி முழு அடைப்பு போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: