சிவகங்கையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி வழக்கு!

சிவகங்கை: சிவகங்கையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது. வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்துவது தொடர்பாக சிவகங்கை ஆட்சியர் அக்.11க்குள் உரிய முடிவெடுக்க ஆணையிடப்பட்டுள்ளது. காமராஜர் காலனி கொட்டகுடி கோயில் திடலில் வரும் அக்.13 முதல் 15-ம் தேதி வரை மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட உள்ளது. போட்டி நடத்த அனுமதி அளிக்க சிவகங்கை ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுமதி அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

The post சிவகங்கையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி வழக்கு! appeared first on Dinakaran.

Related Stories: