பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை பூஜை

திருவில்லிபுத்தூர்: நாகமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலின் உப கோயிலான நாகமலை பால சுப்ரமணிய சுவாமி கோயில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் நிறைவில் அன்னாதனம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி கலா ராணி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை பூஜை appeared first on Dinakaran.

Related Stories: