வெவ்வேறு விபத்தில் 2 பேர் பலி

ஓசூர், அக். 5: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஜிடி.நெல்லூர் அருகே எஸ்.எஸ்.குண்டா திண்டரகப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் ஹேம்நாத் (23). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். கடந்த 3 தினங்களுக்கு முன், ஓசூர் வந்த ஹேம்நாத் மூக்கண்டப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக சென்ற வாகனம் ஹேம்நாத் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த ஹேம்நாத் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், பெங்களூரு ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மூக்கண்டப்பள்ளி தனியார் ஓட்டல் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று முன்தினம் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வெவ்வேறு விபத்தில் 2 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: