மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வர் நிதியுதவி

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‘கன்னியாகுமரி திருவட்டார் வட்டம், ஆற்றூர் கிராமம், தோப்புவிளையில் வசித்துவரும் டெம்போ ஓட்டுநர் சோம்ராஜ் மனைவி சித்ரா (47), மகள் ஆதிரா (23) மற்றும் மகன் அஸ்வின் (19) ஆகிய மூவரும் நேற்று முன்தினம் அவர்களது வீட்டில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். தனது குடும்பத்தினரை இழந்து வாடும் சோம்ராஜ் மற்றும் அவரது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்’ என்று கூறி உள்ளார்.

The post மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வர் நிதியுதவி appeared first on Dinakaran.

Related Stories: