இந்தநிலையில் மானந்தவாடி அருகே உள்ள காட்டிக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டில் மான் இறைச்சி இருப்பதாக தோல்பெட்டி வனவிலங்கு சரணாலய உதவி வனத்துறை அதிகாரி சுனில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த பகுதியை சேர்ந்த தாமஸ் (67) என்பவரது வீட்டில் இருந்து 50 கிலோ மான் இறைச்சியும், மானை வெட்ட பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன. அவரை கைது செய்து விசாரித்தனர்.
அவருடன் குரியன் (58), தங்கச்சன் (51), சந்திரன் (47) ஆகிய 4 பேர் பொறி வைத்து மான் வேட்டையாடியது தெரியவந்தது. இவர்களில் குரியன், தாமசின் தம்பி ஆவார். சந்திரன் தற்காலிக வன பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார். உடனடியாக அவர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
The post வயநாட்டில் பொறிவைத்து மான் வேட்டை வனத்துறை ஊழியர் உள்பட 4 பேர் கைது: 50 கிலோ மான் இறைச்சி பறிமுதல் appeared first on Dinakaran.
