ஆனாலும், தினமும் ஓட்டேரிக்கு வந்து கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட பொருட்களை விற்று வந்துள்ளார். இவரிடம், ஓட்டேரி தாசமகான் தர்கா தெருவை சேர்ந்த அருண் (எ) அப்பு (35), கஞ்சா, போதை மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அப்புவை சந்தித்த அஜிசுல்லா, தனக்காக போதைப் பொருட்களை விற்பனை செய்து தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அருண் மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது அஜிசுல்லா, தனது நண்பர்களுடன் சேர்ந்து அருணை பலமாக தாக்கியுள்ளார். இதில், அருணுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதனால் ஆத்திரமடைந்த அருண், அஜிசுல்லாவை பழிவாங்க வேண்டும் என முடிவு செய்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஓட்டேரி நியூ பேரன்ஸ் சாலையில் உள்ள திறக்கப்படாத பூங்காவில் அப்பு மற்றும் அவரது நண்பர்களான ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் 11வது தெருவை சேர்ந்த சின்ன அப்பு (எ) சத்தியமூர்த்தி (20), ஓட்டேரி பழைய வாழைமா நகர் 3வது தெருவை சேர்ந்த சூர்யா (19). ஓட்டேரி பிரிக்கிளின் சாலையை சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோருடன் அமர்ந்து கஞ்சா அடித்துக் கொண்டிருந்தார். அப்போது அருண், தன்னை அடித்த அஜிசுல்லாவை பழிதீர்க்க வேண்டும் என தனது நண்பர்களிடம் கூறியுள்ளார்.
கஞ்சா போதையில் இருந்த அவர்களும் இதற்கு சம்மதித்துள்ளனர். பின்னர், ஓட்டேரி நியூ பேரன்ஸ் சாலையில் உள்ள இவர்களது கூட்டாளியான சரித்திர பதிவேடு குற்றவாளி பருதின் (22) வீட்டிற்கு சென்று, அங்கிருந்து கத்திகளை வாங்கிக்கொண்டு, வழக்கமாக அஜிசுல்லா வந்து தங்கும் அவரது உறவினர் வீடு உள்ள தாசமகான் ஸ்டாரன்ஸ் சாலை, 4வது தெரு பகுதிக்கு சென்று ரகசியமாக காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த அஜிசுல்லாவை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். அவர்களிடமிருந்து தப்பிக்க அஜிசுல்லா சாலையில் ஓடியபோதும், விடாமல் துரத்தி சென்று, சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில், தலையில் பலத்த காயமடைந்த அஜிசுல்லா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவலறிந்த ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஜிசுல்லா உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, அப்பு மற்றும் சின்ன அப்பு, சூர்யா சூர்யா மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 4 பேரும் நள்ளிரவில் ஓட்டேரி காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இவர்களுக்கு கத்திகளை கொடுத்த ஓட்டேரி நியூ பேரன்ஸ் சாலையை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி பருதீனையும் போலீசார் கைது செய்தனர். நேற்று அப்பு உள்ளிட்ட 4 பேரையும் நீதிமன்றதில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 16 வயது சிறுவனை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post சென்னை ஓட்டேரியில் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை: சிறுவன் உட்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.