தொடர்ந்து, அம்பிகா நகரில் உள்ள பணிபுரிந்த தூய்மை பணியாளர்களிடம், குப்பையை தரம் பிரித்து சேகரிக்கவும், குப்பையை வாங்கும்போது கை உறைகள், முக கவசங்கள் அணிந்து பாதுகாப்பாக வாங்கவும், பொதுமக்கள் தரம் பிரிக்காமல் குப்பை வழங்கினால் அவற்றை வாங்காமல், தரம் பிரித்து தரும்படி கூறி பின்னர் வாங்குங்கள், என அறிவுரை வழங்கினர். அதேபோல், வீடுகளில் உள்ள பொதுமக்களையும் நேரில் சந்தித்து, மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் குப்பையை கொடுக்கும்போது தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். பின்னர் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 67வது வார்டில் ஒருபுறம் மாநகராட்சி சார்பில், மற்றொருபுறம் நெடுஞ்சாலை துறை சார்பில் என ரூ.7.5 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சுதர்சன் நகர் 1, 6, 7வது குறுக்கு தெருகளில் பெரிய, பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. அந்த பகுதியில் முறையாக கழிவுநீர் வெளியேற்றுவதற்கான வடிகால் இல்லை. இதனால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளதை பார்க்க முடிகிறது.
எனவே அப்பகுதியில் கழிவுநீர் சேகரிக்கும் தொட்டி அமைத்து மோட்டார் மற்றும் பைப் லைன்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்றி மழைக்காலங்களில் இந்த பகுதி பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம்,’’ என்றார். மாமன்ற உறுப்பினர்கள் மாடம்பாக்கம் நடராஜன், ரமாதேவி செந்தில்குமார், திமுக நிர்வாகிகள் பொன் சதாசிவம், சாம்சன், ராஜாராமன், சாந்தகுமார், செல்வம், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
The post தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் திட்ட பணிகளை மேயர் ஆய்வு appeared first on Dinakaran.