குழந்தையை கிள்ளிவிட்டு அவர்கள் தொட்டிலையும் ஆட்டுகின்றனர். கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் முதல் 15 நாட்கள் பிரச்னை இல்லாமல் தண்ணீர் கொடுத்தார். இதனை கண்ட கர்நாடக பாஜவினர், விவசாயிகளை தூண்டிவிட்டு போராட்டம் நடத்த வைத்தனர். அரசியல் லாபத்திற்காக பாஜ, கர்நாடகாவில் விவசாயிகளை தூண்டிவிட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் அண்ணாமலையும், பாஜவினரும் இந்த விஷயத்தில் அமைதி காக்கின்றனர். தற்போது அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். அங்கு காவிரி விஷயத்தில் எடியூரப்பா, பொம்மை உள்ளிட்டோர் தலையிடக்கூடாது என கூறுவாரா?. இவ்வாறு அவர் கூறினார்.
The post ‘காவிரி பிரச்னையில் கர்நாடக விவசாயிகளை தூண்டும் பாஜ’ appeared first on Dinakaran.
