அக்டோபர் மாதத்தில் தென்னிந்தியாவ்ல் இயல்பை விட அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது. மேலும் தமிழ்நாடு, கடலோர ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் 88 % முதல் 112 % வரை வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2023-ம் ஆண்டு தென்மேற்கு பருவ மழை தமிழகத்தில் 8% அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜுன் 1 முதல் இன்று வரை தென்மேற்கு பருவமழை பெய்ய வேண்டிய 32 செ.மீ.க்கு பதில் 35 செ.மீ ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் இயல்பை விட 74 % அதிக மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post தென்னிந்திய மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை 88 % முதல் 112 % வரை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.