தீபாவளி மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு தாம்பரம் – திருச்சி இடையே சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படும்: ரயில்வே

சென்னை: தீபாவளி மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு தாம்பரம் – திருச்சி இடையே சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. நாளை தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரயில் (06061) மறுநாள் காலை 6.10 மணிக்கு திருச்சி சென்றடையும். தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் போர்ட், சிதம்பரம் வழியாக செல்லும். சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், திருவெறும்பூர் வழியாக திருச்சி சென்றடையும். மறுமார்க்கமாக திருச்சியிலிருந்து அக்.1 இரவு 10.45-க்கு புறப்படும் ரயில் (06062) மறுநாள் காலை 6.10-க்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தீபாவளி மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு தாம்பரம் – திருச்சி இடையே சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படும்: ரயில்வே appeared first on Dinakaran.

Related Stories: