இதேபோல பெரிய வெங்காயம், உருளை கிழங்கு, கேரட், பீட்ரூட் போன்ற வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட காய்கறிகளின் விலையும் குறைந்து வருகிறது. பெரம்பலூரில் உள்ள உழவர் சந்தையில் கடந்த சில தினங்களாக காய்கறிகளின் விலை சரிய தொடங்கியுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக உள்ளூர் காய்கறிகளான வெண்டை, தக்காளி, முள்ளங்கி, புடலை, கத்தரிக்காய் உள்ளிட்ட நாட்டு காய்கறிகள் கிலோ ரூ.20-க்கு கீழ் விலை குறைந்துள்ளது. சின்ன வெங்காயத்தின் விலையும் கணிசமாக குறைந்திருக்கிறது. வரும் நாட்களில் காய்கறி விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post தமிழ்நாடு முழுவதும் சந்தைகளில் காய்கறிகள் விலை சரிவு: நாட்டு காய்கறிகள் ஒரு கிலோ ரூ.20க்கு கீழ் விற்பனை appeared first on Dinakaran.