மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலி

பெரம்பூர்: ஓட்டேரி மேட்டுப்பாளையம் அருந்ததி நகர் பெரியபாளையத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் காந்தலட்சுமி (எ) ரோஸி (25). இவரது கணவர் கார்த்திக், கடந்த மார்ச் மாதம் தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு ரோஸி, பெரம்பூர் ஏ.ஏ.சாலையில் உள்ள பெற்றோர் வீட்டில் இரண்டரை வயது குழந்தை கவினுடன் வசித்தார். கடந்த 3 நாட்களாக குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நேற்று அதிகாலை குழந்தைசுயநினைவை இழந்தது. இதனால், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, குழந்தை திடீரென்று இறந்துள்ளது.

The post மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலி appeared first on Dinakaran.

Related Stories: