இதையடுத்து, மனைவியின் மரணத்திற்கு இழப்பீடு கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் நாகராஜ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற முதன்மை நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி முன் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கின் சாட்சி விசாரணைக்கு ஆஜராகும்படி, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டருக்கு, நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. சம்மனை வாங்கியிருந்தும் ஓராண்டாக இன்ஸ்பெக்டர் சாட்சி விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டருக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். விசாரணை அக்டோபர் 31ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
The post தூய்மை பணியாளர் விபத்து இழப்பீடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட்: சென்னை மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.