எம்.எல்.ஏ. ஜெயராம், பா.ஜ.க. மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: எம்.எல்.ஏ. ஜெயராம், பா.ஜ.க. மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை விளாங்குறிச்சியில் 45.82 ஏக்கர் நிலத்தில் எம்.எல்.ஏ. ஜெயராம், பாஜக மாவட்ட தலைவர் ஆகியோர் கட்டடங்கள் கட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.229 கோடி மதிப்பிலான நிலம் மாவட்ட நிர்வாகத்தால் மீட்கப்பட்டிருந்தது, அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் சிங்காநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ. ஜெயராம், கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post எம்.எல்.ஏ. ஜெயராம், பா.ஜ.க. மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: