இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, நேற்று காலை 10 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் புறப்பட்டு சென்றார். அங்கிருந்து எகிப்து வழியாக, ஆப்பிரிக்காவின் கானா நாட்டிற்கு செல்கிறார். மேலும், சபாநாயகர் அப்பாவுடன் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனும் சென்றுள்ளார். காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாடு முடிந்து வரும் அக்டோபர் 6ம் தேதி சபாநாயகர் அப்பாவு சென்னை திரும்புகிறார்.
The post காமன்வெல்த் சபாநாயகர் மாநாடு கானா சென்றார் அப்பாவு appeared first on Dinakaran.