இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவகாமி நேரில் சென்று நகையை கேட்டதற்கு, தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை கீழே தள்ளிவிட்ட தம்பதியர் சரமாரியாக தாக்கி காயப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து சிவகாமி, கடம்பத்தூர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதில், நம்பிக்கையின் அடிப்படையில் கொடுத்த 6 சவரன் நகையை திருப்பித் தராமல் அலைக்கழித்ததுடன், திருப்பி கேட்டதற்கு தன்னை தாக்கியதாகவும், ராஜேந்திரன் மற்றும் கவிதா மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் அவர் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கொடுத்த நகையை திருப்பி கேட்டபோது பெண்ணை சரமாரியாக தாக்கிய தம்பதி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.