‘‘என்னால் இனி ஆட்டோ ஓட்ட முடியாது. நான் இருந்து என்ன செய்யப் போகிறேன். நான் சாகப் போகிறேன்,’’ என மனைவியிடம் கூறிவிட்டு, வீட்டிற்குள் சென்று, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில், படுகாயமடைந்த அவர் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 75 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் முகமது காசிம் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post விபத்தில் கை விரல் செயலிழந்ததால் ஆட்டோ டிரைவர் தீக்குளிப்பு: ஆபத்தான நிலையில் சிகிச்சை appeared first on Dinakaran.
