ஆனால் காலை 8 மணிக்கும் விமானம் புறப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், ஏர் இந்தியா ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பயணிகளை சமாதானம் செய்து, காலை 9 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்று விடும் என்று கூறினர். மேலும் விமானத்தில் கோளாறு சரி செய்யப்படாததால், காலை 9 மணிக்கும் விமானம் புறப்படவில்லை. இதையடுத்து பயணிகள் மீண்டும் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பயணிகளை அமைதிப்படுத்திய அதிகாரிகள், பயணிகளை மாற்று விமானங்களில் டெல்லிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகளை செய்தனர். அதன்படி சென்னையில் இருந்து டெல்லி செல்லவிருக்கும் மற்ற விமானங்களில் பயணிகளை அனுப்பி வைத்தனர். இதனால் சென்னையில் இருந்து டெல்லி செல்ல வந்த 164 பயணிகள் 3 மணி நேரத்திற்கு மேலாக, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர்.
The post சென்னை-டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: பயணிகள் அவதி appeared first on Dinakaran.
