தொடர்ந்து அந்த படகில் ஏறிய இலங்கை கடற்கொள்ளையர்கள், மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து, அவர்கள் பிடித்து வைத்து இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மீன்களையும் 550 கிலோ மீன்பிடி வலை, வாக்கி – டாக்கி , ஒரு ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பினர்.இதனிடையே மீன்களை தர மறுத்த மீனவர்கள் 5 பேர் மீது இரும்பு பைப்களை கொண்டு தாக்குதல் நடத்தினர்.
இதில் காயமடைந்த மீனவர்கள் செருதூர் வந்து, பஞ்சாயத்தார்களிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இது குறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். தொடர்ச்சியாக ஒரே கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு அடுத்தடுத்து தாக்குதல் நடைபெற்று வருவது மீனவ கிராமங்கள் மத்தியில் ஒரு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் கடலோர பகுதியில் வசிக்கக்கூடிய மீனவர்கள் மீது தொடர்ச்சியாக இலங்கை கடற்கொள்ளையர்கள் அடாவடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post நாகை மீனவர்களை கழுத்தில் கத்தி வைத்து இரும்பு பைப்களால் தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்!! appeared first on Dinakaran.