விஎச்பி நிர்வாகி மீது பெண் பாலியல் புகார்

மதுரை: திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை சேர்ந்த மணிமேகலை, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கணவரை இழந்த நான், வீட்டு வேலை செய்து வருகிறேன். விஎச்பி செயற்குழு உறுப்பினரான துவரங்குறிச்சி பாண்டியன் வீட்டிலும் வேலை செய்தேன். அவர் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். அவரால் எனக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே, என் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், எனக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று நீதிபதி டி.நாகார்ஜூன் விசாரித்தார். அரசுத் தரப்பில் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து மனுவை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post விஎச்பி நிர்வாகி மீது பெண் பாலியல் புகார் appeared first on Dinakaran.

Related Stories: