இதில் மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி தலைமை தாங்கினார். இவ்விழாவில் பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு வகுப்பறைகளை திறந்து வைத்து சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில், வளசரவாக்கம் மண்டலக்குழு தலைவர் நொளம்பூர் ராஜன், வில்லிவாக்கம் ஒன்றியச் செயலாளர் துரை வீரமணி, மாமன்ற உறுப்பினர்கள் செல்வகுமார், செல்விரமேஷ், ஹேமலதாகணபதி, சங்கர்கணேஷ், சாந்தி ராமலிங்கம், மாலினி, ஸ்டாலின், ரமணிமாதவன் மற்றும் திமுக நிர்வாகிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post போரூர், ராமாபுரம் அரசு பள்ளிகளில் ரூ.3.42 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள்: டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர்கள் திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.