இந்த சாலை வழியாகதான் மேல் சிட்ரபாக்கம், கீழ் சிட்ரபாக்கம் போன்ற பகுதிகளுக்கு அப்பகுதி மக்கள் செல்வார்கள். இதே போல் அம்பேத்கர் நகர் காந்தி தெரு போன்ற பகுதிகளுக்கு பேவர் பிளாக் சாலை அமைக்க கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடந்த பேரூராட்சி மன்ற கூட்டத்தில், 15வது நிதிக்குழு திட்டத்தின் மூலம் ரூ.49.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான டெண்டரும் விடப்பட்டது. ஆனால் 4 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post ஊத்துக்கோட்டையில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகள்: விரைந்து முடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.