இந்த வழக்கு கடந்த 12ம் தேதி நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஷால் நேரில் ஆஜராகியிருந்தார். அப்போது, கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி முதல் இது வரைக்குமான வங்கி கணக்கு விவரங்களையும், விஷாலுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்து விவரங்கள், அவை எப்போது வாங்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்து. நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆவணங்கள் தாக்கல் செய்யாததால், நடிகர் விஷால் மீண்டும் நேரில் ஆஜரானார். அவர் தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டது. அப்போது, விஷால் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை ஏன் எடுக்க கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதி, வங்கிகளிலிருந்து கூடுதல் ஆவணங்களை பெற்று, இணையதளம் மூலம் தாக்கல் செய்ய வேண்டும் என விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில், ஐ.டி.பி.ஐ, ஆக்சிஸ், ஹெச்.டி.எப்.சி, பேங்க் ஆப் இந்தியா, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கிகளில் என ஆறு கணக்குகளின் விவரங்களும், சொத்து விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. அசையா சொத்து விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது, முழுமையான தகவல்களை தாக்கல் செய்யவில்லை என்பதால் பதில் மனு தாக்கல் செய்ய லைகா தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்று வழக்கு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
The post திரைப்படம் தயாரிப்பதற்காக பெற்ற கடன் விவகாரம் நடிகர் விஷால் சொத்து விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்: சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.