இருவரும் நெருக்கமாக பழகி வந்த காரணத்தால் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அவருடைய புகைப்படங்களை வாங்கியுள்ளார். அந்த புகைப்படங்களை வைத்து மாப்பிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என மாணவியை மிரட்டி, அவரிடம் இருந்து சிறுக, சிறுக கடந்த இரண்டு மாதங்களாக 13 சவரன் நகைகளை பறித்துள்ளார். மேலும், மாணவியை மிரட்டி வந்ததால், மாணவி என்ன செய்வது என்று தெரியாமல் தந்தையிடம் இது பற்றி கூறியுள்ளார். உடனே, இதுகுறித்து தந்தை புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் நேற்றுமுன்தினம் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், சந்திப் சோலாங்கியை புதுவண்ணாரப்பேட்டை போலீசார் தேடி வருகிறார்கள். இச்சம்பவம் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
The post புகைப்படத்தை மாப்பிங் செய்து பரப்புவதாக மிரட்டி மாணவியிடம் 13 சவரன் பறிப்பு: வாலிபருக்கு வலை appeared first on Dinakaran.
