செங்கல்பட்டு அடுத்த மகேந்திராசிட்டி பகுதியில் ஐபோன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. ஐபோன் 14 மற்றும் 15 செல்போனுக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தொழிற்சாலையிலிருந்து கரும்புகை வெளியேறியது. இதைக்கண்ட தொழிற்சாலையின் பாதுகாவலர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து செங்கல்பட்டு மற்றும் மகேந்திராசிட்டி பகுதியில் இருந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நிறுவனத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீயானது தற்போது கட்டுக்குள் வந்துள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post செங்கல்பட்டு மாவட்டத்தில் ஐபோன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து appeared first on Dinakaran.
