சென்னை, செப்.25: சென்னையில் வாகன திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை சென்னையில் வாகன திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு சம்பவம் தொடர்பாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10 குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், 2 திருட்டு பைக், ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
The post வழிப்பறியில் ஈடுபட்ட 10 பேர் பிடிபட்டனர் appeared first on Dinakaran.
