டாஸ்மாக் கடைகள் மூடல்

 

திண்டுக்கல், செப். 24: திண்டுக்கல் மாவட்டத்தில் மிலாது நபி மற்றும் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மதுபான விற்பனைத் தலங்கள் மூடப்பட வேண்டும், என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக் கூடங்கள், உரிமம் பெற்ற உரிமைத் தலங்கள் அனைத்தும் மிலாது நபியை முன்னிட்டு செப்.28ம் தேதி மற்றும் காந்தி ஜெயந்தி அக்.2ம் தேதி ஆகிய தினங்கள் மூடப்பட்டியிருக்கும். அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. விதிகளுக்கு மாறாக மதுவிற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post டாஸ்மாக் கடைகள் மூடல் appeared first on Dinakaran.

Related Stories: