விரைவு நீதிமன்ற நடுவர் காரை சேதப்படுத்திய வாலிபர் கைது

 

புழல்: திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரகாசபூபதி (40). ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்ற நீதிபதி. இவர் நேற்று புழல் அடுத்த பத்மாவதி நகருக்கு காரில் குடும்பத்துடன் சென்றார். கதிர்வேடு சர்வீஸ் சாலையில் இருந்து மதுரவாயல் பைபாஸ் சாலை ஏறும் இடத்தில் மோட்டார் சைக்கிளில் பெண்ணை ஏற்றிக்கொண்டு ஒருவர் காரின் முன்பு சென்றார். அப்போது, அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த அந்த நபர் தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை எடுத்து, காரின் பின்பக்கம் கண்ணாடியை உடைத்தார். புகாரின்படி மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கொளத்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த பிரகாஷ (30) என்பவரை கைது செய்தனர்.

The post விரைவு நீதிமன்ற நடுவர் காரை சேதப்படுத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: