இந்த வழக்கின் விசாரணைக்கு இயக்குனர் ஆர்.கே. செல்வமணி அவரின் சார்பில் வழக்கறிஞரும் ஆஜராகாததால் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் உத்தரவை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் வாபஸ் பெற்றது. மேலும் ஜார்ஜ் டவுன் 15வது மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சுமதி முன்பு ஆர்.கே.செல்வமணி இன்று சரணடைந்தார். ஆர்.கே.செல்வமணி தரப்பு வழக்கறிஞர் மனுவை ஏற்று பிடிவாரண்ட் உத்தரவை வாபஸ் பெற்று, விசாரணை நவம்பர்.3க்கு ஒத்திவைத்துள்ளது.
The post அவதூறு வழக்கில் சரணடைந்ததை அடுத்து இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான பிடிவாரண்ட் வாபஸ்..!! appeared first on Dinakaran.