ஜம்மு டிஎஸ்பி கைது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் டிஎஸ்பி ஷேக் அதில் மீது பல்வேறு புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து அவர் மீதான குற்றங்களை கருத்தில் கொண்டு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணையின் அடிப்படையில் தவறான சாட்சியம் அளித்தல், ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஷேக் அதில் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இவர் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் உள்ளூர் நீதிமன்ற உத்தரவின்பேரில் புதனன்று ஷேக் அதிலை போலீசார் கைது செய்தனர்.

The post ஜம்மு டிஎஸ்பி கைது appeared first on Dinakaran.

Related Stories: