இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை ஒன்றிய பாஜக அரசே ஒப்புக்கொண்டதுZERO மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவ மேற்படிப்பில் சேரலாம் என்ற அறிவிப்பின் மூலம், நீட் தேர்வு அர்த்தமற்றது என அவர்களே ஒப்புக்கொண்டனர்; இது பயிற்சி மையம் மற்றும் கட்டணத்திற்கான சம்பிரதாயமாக மாறிவிட்டது, உண்மையான தகுதிக்கான அளவுகோல் இல்லை.விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியும் மனம் தளராத ஒன்றிய அரசு, தற்போது இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது; நீட் என்ற ஆயுதத்தால் பல உயிர்களை கொன்ற பாஜக அரசு அகற்றப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
The post நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை ஒன்றிய அரசே ஒப்புக்கொண்டது :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.