மீராவின் உடலை தேனாம்பேட்டை போலீசார் பிரேத சோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதற்கிடையே உடற்கூறு ஆய்வு முடிந்து நேற்று மதியம் விஜய் ஆண்டனி மற்றும் அவரது மனைவி பாத்திமாவிடம் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு கொண்டு வந்த மீராவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் உடன் படித்த சக மாணவர்கள், சினிமா பிரபலங்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மீராவின் உடலை வேனில் ஏற்றும் போது, அவரது குடும்பத்தினர் கதறி அழுதது அங்கு இருந்த பொதுமக்களிடையே கண்ணீர் வர வழைத்தது. பிறகு மீராவின் உடல் வேனில் ஏற்றப்பட்டு, கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்திற்கு ஊர்வலமாக உடல் எடுத்து செல்லப்பட்டது. அப்போது பொதுமக்கள் மீராவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வேன் பின்னால் வாகனங்களில் அணிவகுத்து சென்றனர். இறுதியாக கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மீராவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
The post தற்கொலை செய்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா உடல் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம்: சினிமா பிரபலங்கள் கண்ணீருடன் இறுதி அஞ்சலி appeared first on Dinakaran.