நேற்று மாலை பெய்த கனமழையை பயன்படுத்தி மழைநீருடன் கழிவுகள் திறந்துவிடப்பட்டதால் 400 ஏக்கர் பரப்பளவிலான குளம் மாசு அடைவதாகவும் மக்கள் தெரிவித்த நிலையில் 4 சாய தொழிற்சாலைகள் விதிகளை பின்பற்றாமல் கழிவு நீரை வெளியேற்றியதை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வரியா அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
ஆகஸ்ட் 30ம் தேதி முதல் கடந்த 7ம் தேதி வரை 3 அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு நடத்திய ஆய்வில் இந்த விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த 4 ஆலைகளின் மின் இணைப்பை துண்டித்து உடனடியாக மூடுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.
The post மழைநீரை பயன்படுத்தி கழிவுகளை வெளியற்றும் ஆலைகள்: சிப்காட் பகுதியில் நீராதாரங்கள் பாதிப்பு appeared first on Dinakaran.