விவசாயிகளுக்கு பயிற்சி

தேன்கனிக்கோட்டை, செப்.20: தளி வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தொட்டமஞ்சி கிராமத்தில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி குழுவில் உள்ள விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் அங்கக சான்றிதழ் பெற்ற முன்னோடி விவசாயிகள் தாமஸ் மற்றும் நாகராஜ் வயலில் பயிற்சி நடத்தப்பட்டது. தளி வேளாண் உதவி இயக்குநர் முருகன் இயற்கை உரங்களான மோர்க்கரைசல், மீன் அமிலம், இயற்கை பூச்சி விரட்டி மற்றும் பஞ்சகாவ்யா தயாரிக்கும் தொழில்நுட்பங்கள் பற்றி கூறி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். மேலும் இயற்கை உரங்கள் தயார் செய்யும் முறைகள் பற்றி செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் நாத் செய்திருந்தார். உதவி வேளாண் அலுவலர் ஜெயம் நன்றி கூறினார். இப்பயிற்சியில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post விவசாயிகளுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: