விண்ணப்பம் தாமதம் ஆவது பற்றி மாணிக்கவாசகம் விசாரிக்க சென்றார். அப்போது சம்பந்தப்பட்ட பிரிவில் பணியாற்றும் பிரிவு அதிகாரியான அன்பரசு என்பவர் பொருட்காட்சிக்கு அனுமதி வழங்க லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத மாணிக்கவாசகம், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி புகார் கொடுத்தவரிடம் ரூ.15 ஆயிரத்தை ெகாடுத்து அனுப்பினர்.
நாமக்கல் கவிஞர் மாளிகையில் 9வது மாடியில் உள்ள அலுவலகத்தில் வைத்து பிரிவு அதிகாரி அன்பரசுவிடம் மாணிக்கவாசகம் பணத்தைக் கொடுத்தார். அவரோ பணத்தை உதவியாளர் பாலாஜியிடம் கொடுக்கும்படி கூறினார். அவரிடம் பணத்தைக் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அன்பரசு, பாலாஜி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் சோதனையிட்டபோது அவர்களிடம் 3 கவரில் இருந்த ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன. 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
The post பொருட்காட்சிக்கு அனுமதி வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 அரசு ஊழியர்கள் கைது: நாமக்கல் கவிஞர் மாளிகையில் பரபரப்பு appeared first on Dinakaran.