இந்த வழக்கு பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மோகன்லால் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி பெரும்பாவூர் நீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், நவம்பர் 3ம் தேதி மோகன்லால் உள்பட 4 பேரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதை எதிர்த்து மோகன்லால் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இதை நேற்று விசாரித்த நீதிபதி குஞ்சிகிருஷ்ணன், மோகன்லால் மீதான வழக்கை விசாரிக்க 6 மாதத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
The post நடிகர் மோகன்லால் வீட்டில் யானைத்தந்தங்கள் சிக்கிய விவகாரம் விசாரணை நடத்த 6 மாதம் இடைக்காலத் தடை: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.