அப்போது பாதுகாப்பு வாகனத்தில் இருந்த 5க்கும் மேற்பட்ட போலீசார் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். விபத்தில் இரண்டு வாகனங்களும் சேதடைந்தது. இந்த விபத்தால் முன்னால் கார் ஓட்டி சென்ற சைபது இம்ரானுக்கும் போலீஸ் பாதுகாப்பு வாகனத்தில் இருந்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் அண்ணாசாலையில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ேநரில் சென்று இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் காயமடைந்த போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்றனர்.
The post அண்ணாசாலையில் வரும் போது ஆளுநர் தமிழிசையின் பாதுகாப்பு வாகனம் கார் மீது மோதி விபத்து: சிறு காயங்களுடன் போலீசார் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.